காலி தேசிய வைத்தியசாலையில் பாதுகாக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று (11) முற்பகல் உத்தரவிட்டுள்ளார்.
காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இந்த சடலங்களை ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
காலி துறைமுகப் பொலிஸாரால் காலி பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர் நீதவான் சமீர தொடங்கொட இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.