Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

இலங்கையில் வாகனங்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டின் அளவு உயர்வு

Posted on March 21, 2026 by Admin | 195 Views

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்த புதிய திருத்தத்தின் படி வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளது:

  • மோட்டார் வாகனங்களுக்கு 15 லீற்றரிலிருந்து 25 லீற்றர் வரை
  • முச்சக்கரவண்டிகளுக்கு 20 லீற்றர் வரை
  • வேன்களுக்கு 50 லீற்றர் வரை
  • மோட்டார் சைக்கிள்களுக்கு 8 லீற்றர் வரை
  • பேருந்துகளுக்கு 100 லீற்றர் வரை
  • நில வாகனங்களுக்கு 25 லீற்றரிலிருந்து 40 லீற்றர் வரை
  • குவாட்ரி சைக்கிள்களுக்கு 5 லீற்றரிலிருந்து 8 லீற்றர் வரை

அதே நேரத்தில், லொறிகளுக்கான 200 லீற்றர் ஒதுக்கீடும் விசேட தேவைக்கான வாகனங்களுக்கு வழங்கப்படும் 40 லீற்றர் ஒதுக்கீடும் மாற்றமின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தை சீரமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.