Top News
| உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின | | காலி ரயில் நிலையத்தில் பற்றி எரியும் ரயில் பெட்டிகள் | | நீர் வெட்டு தொடர்பாக வெளியான அறிவிப்பு |
Mar 31, 2026

ஈரானின் அதி உயர் பாதுகாப்புச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம்

Posted on March 24, 2026 by Admin | 145 Views

ஈரானின் அதி உயர் தேசிய பாதுகாப்புச் சபையின் புதிய செயலாளராக மொஹமட் பாகர் சொல்காதர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தை மேற்கோள் காட்டி ஐ.ஆர்.என்.ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல்–அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் அந்தச் சபையின் செயலாளராக இருந்த அலி லரிஜானி கடந்த வாரம் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மொஹமட் பாகர் சொல்காதர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.