(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதன்படி நாளை (26) வியாழக்கிழமை காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் இந்த காலப்பகுதியில் நீர் பயன்பாட்டை சிக்கனமாக மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் திருத்தப்பணிகள் நிறைவடைந்ததும் இயல்பான குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.