Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

அட்டாளைச்சேனை ரஹ்மானிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் புதிய மிம்பர் அங்குரார்ப்பண நிகழ்வு

Posted on May 14, 2026 by Admin | 141 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை 07, மஸ்ஜிதுர் ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மிம்பரின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை (15) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அப்ரார் பவுண்டேஷனின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அஹ்ரம் அபூபக்கர் (நளீமி) கலந்து கொண்டு ஜும்ஆ பிரசங்கத்தை நிகழ்த்தவுள்ளார்.

பள்ளிவாசலின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மிம்பர் சமூதாய மற்றும் மார்க்க நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் ஜமாஅத் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

இந்நிகழ்வானது ACMYCOFFICIAL எனும் முகப்புத்தகத்தினூடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.