இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை உயர்வைத் தொடர்ந்து ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த புதிய விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.