தேசிய மின் கட்டமைப்பின் நம்பகமான மற்றும் நிலையான செயல்பாட்டை உறுதி செய்யும் நோக்கில், இன்று (30) பிற்பகல் 3:00 மணி வரை கூரை சூரிய மின் தகடுகளின் (Rooftop Solar) செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தேசிய கட்டமைப்பு இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின் கட்டமைப்பின் சமநிலையைப் பேணவும், அதன் ஸ்திரத்தன்மைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கவுமே இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.