Top News
| பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு | | இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம் |
Aug 16, 2026

கண்டி, நுவரெலியா பாடசாலைகளுக்கு நாளை (04) விடுமுறை

Posted on August 3, 2026 by Admin | 196 Views

மலையகப் பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு ஆகிய அனர்த்த சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.