இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பஹிலா இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் இன்று (31) காலை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவர் 2015 ஆம் ஆண்டு அந்த கூட்டுத்தாபனத்திற்காக 50 தற்காலிக களஞ்சியசாலைகள் (கொட்டகைகள்) இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படாததால் கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 99,679,799.70 நட்டம் ஏற்பட்டதோடு வெளித் தரப்பினருக்கு அதே அளவு இலாபம் கிடைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 8.30 மணியளவில் ஆணைக்குழுவில் நடைபெற்ற விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஹுஸைன் அஹமட் பஹிலா கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.