Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைவு, டீசல் விலை உயர்வு

Posted on October 31, 2025 by Admin | 148 Views

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் புதிய எரிபொருள் விலைகள் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, இரண்டு முக்கிய எரிபொருள் வகைகளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை ரூபா 5.00 குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை ரூபா 294.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா சூப்பர் டீசல் (4 ஸ்டார் யூரோ 4) லீற்றரின் விலை ரூபா. 5.00 உயர்த்தப்பட்டு அதன் புதிய விலை ரூபா. 318.00 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற எரிபொருள் வகைகளின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

விலை விவரம் (ஒரு லீற்றருக்கு):

  • பெற்றோல் 95 ஒக்டேன்: ரூ. 335.00 → மாற்றமில்லை
  • லங்கா ஒட்டோ டீசல்: ரூ. 277.00 → மாற்றமில்லை
  • மண்ணெண்ணெய்: ரூ. 180.00 → மாற்றமில்லை

இத்துடன், எரிபொருள் விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட உள்ளன.