Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

இன்று பிற்பகல் அம்பாறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted on November 2, 2025 by Admin | 143 Views

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பின்படி சப்ரகமுவா, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று (நவம்பர் 2) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதற்கிடையில், நாட்டின் பிற பகுதிகளில் பொதுவாக வானிலை சீராக இருக்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய, சப்ரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரங்களில் மூடுபனி காணப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் உண்டாகும் ஆபத்துகளைத் தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.