Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – பாடசாலையின் மூன்றாம் தவணைக்குரிய முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு

Posted on November 6, 2025 by Admin | 306 Views

கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பின்படி நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் (07.11.2025) நிறைவடைகிறது.

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் வரும் டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.