உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (7) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாட்டுப் பயணத்தில் உள்ள நிலையில் அவர் நாட்டிற்கு திரும்பும் வரையிலும் செயற்படும் வகையில் இந்த இடைக்கால நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவும் கலந்து கொண்டார்.