Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

இஸ்லாமாபாத் குண்டுத் தாக்குதலினால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்ப முடிவு

Posted on November 12, 2025 by Admin | 136 Views

பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை கிரிக்கெட் அணியின் 16 வீரர்கள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்லாமாபாத் நகரில் நேற்று நிகழ்ந்த தற்கொலை குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக இலங்கை வீரர்கள் இத்தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

நாளை நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியும் ரத்துச் செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் மூலங்கள் தெரிவிக்கின்றன.

தொடர் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மாற்று அணியை அனுப்பும் திட்டத்தை இலங்கை கிரிக்கெட் சபை பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.