Top News
| இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி | | குளியாப்பிட்டியவில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை கணவர் மீது சந்தேகம் | | இன்று மழையுடன் கூடிய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட எச்சரிக்கை |
Jun 9, 2025

காசா நரகத்தைவிட மோசமாக மாறியுள்ளது

Posted on June 5, 2025 by Admin | 67 Views

காசாவின் தற்போதைய நிலை நரகத்தையுங்கூட மீறியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் மிர்ஜானா ஸ்போல்யாரிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மனித நேயம் இன்று பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது” என வேதனையுடன் குறிப்பிட்டார்.

போரையும், பாலஸ்தீன மக்களின் துயரத்தையும் முடிவுக்கு கொண்டுவர, மேலும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க சர்வதேச நாடுகள் செயற்பட தவறியுள்ளன என அவர் விமர்சனம் செய்தார்.

காசாவில் உள்ள ஒரு நிவாரண மையத்திற்கு அருகில், உதவி பெற வந்த பொதுமக்கள்மீது இஸ்ரேல் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து அவர் பேசும் போதே, இந்த அதிரடியான கருத்துகள் வெளியாகின.