Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு 

Posted on June 5, 2025 by Arfeen | 210 Views

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு: விவசாய காப்பீட்டு சபை அறிவிப்பு

தெற்பான மழையால் சேதமடைந்த நெல், சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம், போஞ்சி மற்றும் பச்சை மிளகாய் போன்ற பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வேளாண் மற்றும் விவசாய காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.

இதற்காக, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஐந்து ஏக்கர் நிலத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சம் வரையிலான தொகை இழப்பீடாக வழங்கப்படும்.

பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகள், விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் 1918 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்து தங்களின் விவரங்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.