Top News
| கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு | | மக்களின் துயர் துடைத்த அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி,ஏறாவூர் நகர சபைகளின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைந்துள்ளன | | தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை |
Dec 19, 2025

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

Posted on December 2, 2025 by Admin | 100 Views

முன்னாள் அமைச்சர் சி. பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

அவர் இன்று முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்கினார்.

வாக்குமூலம் வழங்கச் சென்ற அவர் அதே இடத்தில் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.