Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

Posted on December 18, 2025 by Admin | 236 Views

நிலவும் தொடர்மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாயத் தொடங்கியுள்ளதாக மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதன் விளைவாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால் ஆற்றை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அந்த அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், கலாவெவ வடிநிலத்திற்குட்பட்ட கலாவெவ மற்றும் கந்தளாய் நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, போவதென்ன, இப்பன்கட்டுவ, மொரகஹகந்த மற்றும் களு கங்கை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகபட்ச அளவை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், மாதுரு ஓயா நீர்த்தேக்கமும் முழு கொள்ளளவை அடைந்துள்ளதால் அது விரைவில் வான் பாயும் நிலை உருவாகக்கூடும் என மகாவலி அதிகாரசபை மேலும் எச்சரித்துள்ளது.