Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

பாமஸியில் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தவருக்கு 06 மாத சிறை

Posted on June 8, 2025 by Admin | 420 Views

தெஹிவளை, கவுதான பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு பாமசி (மருந்தகம்), காலாவதியான மருந்துகளை விற்பனைக்கு வைத்திருந்தது என்பதற்காக, அதன் வியாபாரிக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், குற்றவாளி மீது 10 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்ட (suspended) தண்டனை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையால் (CAA) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மருந்தகத்தில் விற்பனைக்காக வைத்திருந்த மருந்துகள் காலாவதியானவை என்பது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மே 30 ஆம் திகதி மவுண்ட் லாவினியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், குற்றத்தை வியாபாரி நேரடியாக ஒப்புக்கொண்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

பொது மக்களின் உயிர் பாதுகாப்பு முக்கியம் என்பதனை வலியுறுத்திய நீதிபதி, குற்றவாளிக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் எச்சரிக்கை:

CAA, தீவு முழுவதும் மருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் பொருள் விற்பனை நிலையங்களில் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும், சட்டவிரோதமான விற்பனைகளில் ஈடுபடும் வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.