Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்தில் 3,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்

Posted on June 8, 2025 by Hafees | 202 Views

பொசன் பூரணையை முன்னிட்டு நாளை முதல் அனுராதபுரம், மிகிந்தலை மற்றும் அநுராதபுரத்தில் அமைந்துள்ள 8 வழிபாட்டுத் தலங்களுக்கும் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 3,500 காவல்துறையினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வழிபாட்டுத் தலங்களை அடிப்படையாகக் கொண்டு, போக்குவரத்தை நிர்வகிக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குளங்களைச் சுற்றி ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் இந்தப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக, பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.