Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

பொத்துவில் அபிவிருத்தி குறித்து ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

Posted on January 28, 2026 by Admin | 416 Views

(பொத்துவில் செய்தியாளர் – முஸால்)

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நஸீல் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்தி குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (28.01.2026) பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.

பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி சம்மந்தமாக விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், கே.கோடிஸ்வரன், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்