Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

அனுராதபுர சிறைச்சாலை அதிகாரி கைது

Posted on June 9, 2025 by Admin | 174 Views

அனுராதபுர சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன இன்று (ஜூன் 09) காலை பொலிஸ் குற்றப்புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், ஜூன் 11 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு கைதியை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக எழுந்த ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவரை பொலீசார் கைது செய்துள்ளனர்.