மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை எடுத்துள்ள புதிய தீர்மானத்தின் படி ஒரு கிலோமீட்டருக்கான ஆரம்ப கட்டணம் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 110 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணமும் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 85 ரூபாவாக இருந்தது 90 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு பயணிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.