Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

Posted on April 4, 2026 by Admin | 291 Views

வவுனியா மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது கஞ்சாவுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1 கிலோ 970 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த நேரத்திலேயே குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சா, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸார் பாதுகாப்பில் எடுத்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் சாய்ந்தமருது மற்றும் மஸ்கெலியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.