Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

பௌத்த தேரர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு தர்ம நீதிமன்றை மீண்டும் நிறுவ ஏற்பாடு

Posted on May 27, 2026 by Admin | 97 Views

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் கொண்ட ‘தர்ம நீதிமன்றம்’ மீண்டும் நிறுவப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கான சட்ட திருத்தங்களே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தின் திஹகொட மிதெல்லவல புராதன விகாரையில் நடைபெற்ற அரச வெசாக் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.