Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

மத்திய ஆபிரிக்காவுக்கு ஐ.நா. அமைதி பணிக்காக அனுப்பப்பட்ட இலங்கை விமானப்படை மருத்துவ குழு

Posted on June 15, 2025 by Hafees | 106 Views

ஐ.நா. அமைதி காக்கும் பணிக்கு மருத்துவ விமான இடமாற்றக் குழுவை அனுப்பிய இலங்கை

இலங்கை விமானப்படை முதல் முறையாக மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா. அமைதி காக்கும் பணிக்கு மருத்துவ விமான இடமாற்ற குழுவை அனுப்பியது.

இலங்கை விமானப்படை (SLAF), முதல் முறையாக மருத்துவ விமான இடமாற்ற குழு (AMET) ஒன்றை, மத்திய ஆபிரிக்க குடியரசில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக நேற்று (14) அனுப்பி வைத்தது.

குழுவுக்கான கெப்டன் ஜி.எஸ்.எஸ். பெரேரா தலைமையிலான இந்த குழுவில், இரண்டு அதிகாரிகள் மற்றும் நான்கு விமானப்படை வீரர்கள் உட்பட ஆறு மருத்துவ பணியாளர்கள் அடங்கியுள்ளனர். இவர்கள், ஐ.நா. பணிகளுக்கு ஆதரவாக மருத்துவ விமான இடமாற்ற பணிகளை மேற்கொள்வர்.

புறப்படுவதற்கு முன், AMET குழு நேற்று முன்தினம் (13) விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவை மரியாதை நிமித்தமாக சந்தித்தது. இதன்போது, தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், உலகளாவிய அமைதி காக்கும் முயற்சிகளில் இலங்கை விமானப்படையின் பங்கை வலுப்படுத்துவதில் இந்த பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்