சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் உயரும் நிலைப்பாட்டைக் காட்டுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கின் முக்கிய நகரப்பகுதிகளில் தொற்று புதிய அலையாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரில் மட்டும், மே 3ஆம் திகதியுடன் முடிந்த ஒரே வாரத்தில் கொரோனா தொற்று 28 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அந்த வாரத்தில் 14,200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல், தாய்லாந்திலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது