Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

தங்காலை வெல்ல துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகு விபத்து – 2 மீனவர்கள் காணாமல் போனனர்

Posted on June 29, 2025 by Hafees | 447 Views

தங்காலை பரவி வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்கு புறப்பட்டு இன்று (29) காலை விபத்துக்குள்ளான நெடுநாள் மீன்பிடி படகில் இருந்து காணாமல் போன இரண்டு மீனவர்களை தேடுவதற்காக, விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் வகை விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விமானம் வழியாக காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி தற்போது சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்று வருவதாக விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான அந்த நெடுநாள் மீன்பிடி படகில் ஆறு மீனவர்கள் இருந்த நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.