Top News
| அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் |
Aug 18, 2025

உணவுப் பெட்டியில் துப்பாக்கியுடன் பாடசாலைக்கு வந்த மாணவன்

Posted on June 30, 2025 by Admin | 119 Views

வோஷிங்டன் நகரில் உள்ள ஒரு பள்ளியில், மாணவனின் மதிய உணவுக்காக கொண்டு வரப்பட்ட பெட்டியில் உணவுடன் சேர்த்து தவறுதலாக ஒரு துப்பாக்கியும் வைக்கப்பட்ட சம்பவம் அங்குள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலையில் மதிய உணவுக்காக உணவு பெட்டியை திறந்த மாணவன், அதில் இருந்து துப்பாக்கி வெளிப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் நடைபெற்ற விசாரணையில், அந்த துப்பாக்கி மாணவனின் தந்தை சார்பில் தாமாகவே தயார் செய்யப்பட்ட உணவு பெட்டியில் தவறுதலாக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து மாணவனின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த மாநிலத்தின் காவல்துறையினர் மேலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.