கொழும்பு ப்ளூமெண்டல் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மே 18 பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இந்த சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து, உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.