Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததனால் 17 வயது மாணவன் உயிரழப்பு

Posted on July 4, 2025 by Admin | 246 Views

காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று (ஜூலை 4) அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில், 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மட் என்ற மாணவன் அதிகாலை வேளையில் கடற்கரை வீதியூடாக மோட்டார்சைக்கிளில் பயணித்த போது, வாகனத்தின் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணில் மோதி கடும் விபத்துக்குள்ளானார்.

விபத்தின் பிறகு அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றும், சிகிச்சை பலனளிக்காமை காரணமாக அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.