Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளராக பாறூக் நஜீத் கடமையேற்பு

Posted on July 4, 2025 by Admin | 159 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரஸ் சார்பில் உதவித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட பாறூக் நஜீத் தனது பதவியை உத்தியோகபூர்வமாக கடமையேற்கும் நிகழ்வானது இன்று 04.07.2025ம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பிரதேச சபையின் செயலாளர் எல்.எம்.இர்பான் அவர்களினால் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது

பதவியை பொறுப்பேற்கும்போதே, பலஸ்தீன மக்களின் சுதந்திரம் மற்றும் நீதிக்கான போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவையும் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, சபையின் கெளரவ உறுப்பினர்கள், அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் யூ.எல்.உவைஸ், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.அஸ்பர் , நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாபுடீன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சூறா சபையின் செயலாளர் யூ.எம்.வாஹித், கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், பிரதேசங்களின் மத்திய குழுத் தலைவர்கள், உறுப்பினர்கள் , கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்