Top News
| அரச நிறுவனத் தலைவர்களுடன் தவிசாளர் முஷாரப்பின் முக்கிய கலந்துரையாடல் | | மார்க்ஸ்மேன் மின்னொளி கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தினை பறக்கவிட்ட ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியர்ஸ் அணி | | டேட்டிங் செயலி மூலம் ஏமாற்றி நிர்வாண வீடியோவால் மிரட்டிய 5 பேர் கைது |
Jul 7, 2025

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் வாட்ஸ்அப் கணக்கு தற்போது வழமைக்கு திரும்பியது

Posted on July 4, 2025 by Admin | 70 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகிக்கும் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் வாட்ஸ்அப் கணக்கு, நேற்று ஹேக் செய்யப்பட்டிருந்தது.

ஹேக் செய்யப்பட்ட அந்த கணக்கின் மூலம், சிலரிடம் பணம் கேட்டும், தவறான தகவல்களையும் பகிர்ந்துள்ளனர்.

வாட்ஸ்அப் கணக்கின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறும் நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டதாகவும், தற்போது வாட்ஸ்அப் கணக்கு வழமைக்கு திரும்பியுள்ளது என தவிசாளர் உவைஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களில் நடைபெறும் இத்தகைய தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதுடன் வாட்ஸ்அப்பில் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான தகவல்களும் வந்தால் உடனடியாக உறுதி செய்து கொள்ளவும்.

இந்த ஹேக்கிங் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.