Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

நெல்லுக்கான உத்தரவாத விலை விவசாயிகளை பாதிக்காது – விவசாய பிரதி அமைச்சர்

Posted on July 5, 2025 by Admin | 154 Views

நாட்டின் சில பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை தொடங்கிய நிலையில், நெல்லுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள உத்தரவாத விலை விவசாயிகளை எந்தவிதத்திலும் பாதிக்காது என விவசாய விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், நெல் அறுவடையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இந்த விலை போதுமானதாக இல்லையென்று வலியுறுத்துகின்றனர். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லிற்கான விலை, உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ப பொருந்துவதில்லை என்பதே விவசாயிகளின் மையக் குற்றச்சாட்டு.

அரசு நியமித்துள்ள விலையால் விவசாய பொருளாதாரமும் சிக்கலடையக்கூடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாவது, நெற்பயிர் உற்பத்திக்கான நிதிச் செலவுகளை கருத்தில் கொண்டு உத்தரவாத விலையை திருத்த வேண்டும் என்பதாகும்.