Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இலங்கையில் செலுத்திய VAT தொகையை விமான நிலையத்திலேயே மீளப் பெறும் சேவை ஆரம்பம்

Posted on July 5, 2025 by Admin | 279 Views

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பொருட்கள் வாங்கும்போது செலுத்தும் பெறுமதி சேர் வரி (VAT) தொகையை மீளப் பெற உதவும் புதிய சேவையகம் ஒன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் தொழில் மற்றும் நிதி பிரதி அமைச்சர் அணில் ஜெயந்த ஆகியோரின் தலைமையில் நேற்று (ஜூலை 4) நடைபெற்றது.

இந்த சேவை மூலம், இலங்கையில் 90 நாட்களுக்குள் தங்கும் சுற்றுலாப் பயணிகள், ரூ.50,000 ஐ விட அதிகமான தொகையை VAT வரியாக செலுத்தினால் தாம் செலுத்திய VAT வரியை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மீளப் பெற முடியும்.

சேவையின் முக்கிய நோக்கங்கள்:

  • சுற்றுலா வர்த்தகத்தை ஊக்குவித்தல்
  • இலங்கையின் உள்நாட்டு உற்பத்திகளை ஆதரித்தல்
  • வரி வசூல் மற்றும் மீளளிப்பு முறையை ஒழுங்குபடுத்தல்

இந்த நடவடிக்கை, வர்த்தக மற்றும் சுற்றுலா துறைகளில் நம்பிக்கையை அதிகரிக்கவும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைக்கவும் பயனளிக்குமென அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.