Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

நாட்டில் மீண்டும் துப்பாக்கி சூடு – தாய், மகள் உட்பட மூவர் காயம்

Posted on July 6, 2025 by Sakeeb | 213 Views

அவிசாவளை – கொஸ்கம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் தாய், மகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம், கொஸ்கம சுதுவெல்ல பகுதியில் உந்துருளியில் வந்த இரு நபர்களால் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலின் நோக்கம் இதுவரை தெரியவில்லையெனவும், வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் 12, 30 மற்றும் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிறுமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரும் அவிசாவளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.