Top News
| QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை | | எரிபொருள் QR முறை சிக்கல்களுக்கு தீர்வு |
Mar 18, 2026

நாளை தொடக்கம் நாடளாவிய ரீதியில் தேசிய விபத்து தடுப்பு வாரம்

Posted on July 6, 2025 by Admin | 231 Views

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில், தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை (ஜூலை 7) முதல் ஜூலை 11 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த வாரம், நாட்டில் அதிகரித்து வரும் விபத்துகள், அவை ஏற்படுத்தும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் போன்றவைகளை குறைக்கும் நோக்கத்தில் அமல்படுத்தப்படுகிறது.

இதற்கான ஒரு முக்கியத்துவமான கட்டமாக, விழிப்புணர்வு பிரசாரங்கள், பயிற்சி முகாம்கள், மற்றும் செயல்முறை செயல்பாடுகள் போன்றவை, பாடசாலைகள் , வேலைத்தளங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் நடத்தப்படவுள்ளன.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் 10,000 முதல் 12,000 பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். மேலும், ஒவ்வொரு நிமிடமும் 6 முதல் 8 பேர் வரை விபத்துகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றுள்ளது.

விபத்துகள் அடிக்கடி நடைபெறும் வீதிகள், தொழிலிடங்கள் மற்றும் நீரில்மூழ்கும் அபாயம் உள்ள பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த வாரத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய நிகழ்ச்சியில், சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு, விபத்து தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு, மற்றும் பிராந்திய சுகாதார பணிமனைகள் இணைந்து செயற்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.