Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

கனமழையால் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள் கவனத்திற்கு

Posted on May 19, 2025 by Hafees | 169 Views

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

மழையினால் சாலை மேற்பரப்பில் வழுக்கல் ஏற்படக்கூடியதால் விபத்து அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதையும், இந்த நிலையில் அதிக வேகத்தில் செலுத்துதல் ஆபத்தாக இருக்கலாம் என்பதையும் அதிகாரசபை எச்சரித்துள்ளது.

அதன்படி, மழை பெய்யும் போது சாரதிகள் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்திலேயே பயணிக்க வேண்டும் என அதிவேக நெடுஞ்சாலை செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பிரிவின் துணைப் பொது மேலாளர் ஆர்.ஏ.டி. அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்புக்காக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைவரும் இந்த அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.