Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

சொத்து அறிக்கைகள் தாக்கல் செய்யாத அரச அதிகாரிகளுக்கு இன்று முதல் அபராதம்

Posted on July 14, 2025 by Sakeeb | 250 Views

சொத்து மற்றும் பொறுப்புக்கூறல் அறிக்கைகளைத் தாமதமாகச் சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக, இன்று (14) முதல் அபராத நடவடிக்கைகள் அமலுக்கு வருகிறது.

அரச ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 30ஆம் திகதிக்குள் சொத்து மற்றும் பொறுப்புக்கூறல் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அனைத்து அரச அதிகாரிகளுக்கும் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்தக் காலக்கெடுவை மீறி இதுவரை அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து, ஒவ்வொரு நாளுக்கும் 1/30 பங்கு வீதமாக அபராதமாகக் கழிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும், கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான நடைமுறைகள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டுமெனவும் அந்த ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.