Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

பாதாள உலக துப்பாக்கிச் சூடுகளில் அரசியல் தலையீடு பாதுகாப்பு அமைச்சர் வாக்குமூலம்

Posted on May 20, 2025 by Hafees | 127 Views

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான துப்பாக்கிச் சூடுகளில்அரசியல் தலையீடுகள் உள்ளமை புலனாய்வுத் தகவல்களில் இருந்து உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜெபால இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூடுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதியின் பெயர் விரைவில் அம்பலமாகும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜெபாலக் கூறியுள்ளார்.