Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

நாகேந்திரன் நினைவுக் கிண்ணம் சாம்பியன் பட்டத்தை அபாரமாக கைப்பற்றியது அட்டாளைச்சேனை சோபர் அணி!

Posted on July 21, 2025 by Admin | 430 Views

மட்டக்களப்பில் துறைநீலாவனையில் அமைந்துள்ள Central விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நாகேந்திரன் நினைவுக்கிண்ணம் 2025 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இதில் பல அணிகளை பின்னுக்கு தள்ளி, இறுதிப் போட்டியில் பதிலடிகள் போட்டு எதிரிகளைச் சீர்குலைத்த அட்டாளைச்சேனை சோபர் அணி, வெற்றி கிண்ணத்தையும் ரூ.50,000 பரிசுத் தொகையையும் வென்றது.

போட்டித் தொடரின் சிறந்த ஆட்டக்காரராக முத்திரை பதித்த சோபர் அணியின் முபாரிஸ் முபா (Mufaris Mufa), அதிகூடிய ஓட்டங்கள், அதிக 6 ஓட்டங்கள் அடித்ததோடு, இறுதிப்போட்டியின் மேன் ஆஃப் தி மேட்ச் விருதையும் தட்டிச்சென்றார்.