Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

இந்தியாவிலிருந்து 3,050 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி இலங்கைக்கு

Posted on May 21, 2025 by Hafees | 209 Views

நாட்டில் உருவாகியுள்ள உப்புத் தட்டுப்பாட்டை சமாளிக்கும் முயற்சியாக, இந்தியாவிலிருந்து 3,050 மெட்ரிக் தொன் உப்பு இன்றிரவு (மே 21) இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது நாட்டின் உப்புத் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு பரந்த நடவடிக்கையாகும். இலங்கையின் மாதாந்திர உப்புத் தேவை சுமார் 15,000 மெட்ரிக் தொன்களாகவும், ஆண்டுத் தேவை 180,000 மெட்ரிக் தொன்களாகவும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.