Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

நாமல் ராஜபக்ஷவுக்கு நேற்று பிடியாணை, இன்று பிணை

Posted on July 29, 2025 by Admin | 433 Views

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதன் காரணமாக, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில், மாலைதீவிலிருந்து இன்று காலை நாடு திரும்பிய நாமல் ராஜபக்ஷ, நகர்த்தல் பத்திரத்துடன் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி விடுவிக்க உத்தரவிட்டது.