Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

நாமல் ராஜபக்ஷவுக்கு நேற்று பிடியாணை, இன்று பிணை

Posted on July 29, 2025 by Admin | 112 Views

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதன் காரணமாக, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில், மாலைதீவிலிருந்து இன்று காலை நாடு திரும்பிய நாமல் ராஜபக்ஷ, நகர்த்தல் பத்திரத்துடன் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி விடுவிக்க உத்தரவிட்டது.