மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
மொத்தம் 14 இலட்சம் பயனாளிக் குடும்பங்களுக்காக ரூ.11 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்காக தகுதியான பயனாளிகள், தங்களது வங்கிக் கணக்குகள் மூலமாக மே மாத கொடுப்பனவுகளைப் பெறலாம் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.