Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

வாட்ஸ்அப் மூலம் பண மோசடி அதிகரிப்பு

Posted on July 30, 2025 by Admin | 110 Views

வட்ஸ்அப் மூலம் பண மோசடி செய்யும் கோரமான முயற்சிகள் அதிகரித்து வருகின்றன என குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக பலர் போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

மோசடிக்குழுக்கள், அவர்களிடம் இருந்து வட்ஸப் OTP எண்களைத் திருடுகின்றன. இதன்பின், அவர்களின் கணக்குகள் மூலம் மற்றவர்களுக்கும் போலி செய்திகளை அனுப்பி, மேலும் மோசடி செய்து வருகின்றன என்ற தகவல்களும் விசாரணையில் வெளியாகியுள்ளது.

இத்தகைய மோசடிகளில் விழிப்புடன் இருக்க பொதுமக்கள் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“எந்த சந்தர்ப்பத்திலும் உங்கள் OTP எண்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்,” என காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.