Top News
| அட்டாளைச்சேனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கலந்துரையாடல் வெற்றிகரமாக நடைபெற்றது | | பாலமுனை வைத்தியசாலைக்கு IPHS Campus நிறுவனத்தால் நன்கொடை வழங்கல் | | 37 ஆண்டு கல்விப் பணியை நிறைவு செய்த பிரதி அதிபர் எச்.எம். ரசீனுக்கு நெகிழ்வான பிரியாவிடை |
Jul 19, 2025

மின்னல் தாக்கம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Posted on May 22, 2025 by Arfeen | 56 Views

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய எச்சரிக்கையின்படி, இன்று நாட்டின் சில பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுடன், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அங்கு வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ் சூழ்நிலைகளால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைக்கும் வகையில், பாதுகாப்பான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.