Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

இராணுவ முகாமில் நுழைந்த இளைஞன் சடலமாக மீட்பு – ஐந்து இராணுவத்தினர் கைது

Posted on August 9, 2025 by Admin | 297 Views

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற பின்னர் காணாமல் போன இளைஞன், இன்று (சனிக்கிழமை) அதிகாலை முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

இளைஞன் காணாமல் போனதைத் தொடர்ந்து, தொடர்புடையவர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், ஊர்மக்களும் பரவலான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

காலை நேரத்தில் நடத்தப்பட்ட தேடுதலில், இளைஞனின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஐந்து இராணுவத்தினரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.