Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

இவ்வருடத்தின் முதல் 5 மாதங்களில் 32 சிறுமிகள் கர்ப்பம் – அதிர்ச்சி புள்ளிவிபரம்

Posted on August 12, 2025 by Admin | 123 Views

நாட்டின் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 18 வயதுக்குட்பட்ட 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.

அதிகாரசபை வருடாந்தம் வெளியிடும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 53 சிறுமிகள் கர்ப்பம் தரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்திருப்பது, சமூகத்தில் கவலைக்கிடமான நிலையை வெளிப்படுத்துவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இத்தகைய சம்பவங்களைத் தடுக்கும் வகையில், மாணவர்களுக்கு முறையான பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.