Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

இந்தியாவிலிருந்து உப்பினை இறக்குமதி செய்யும் செயற்பாடு முன்னெடுப்பு

Posted on May 25, 2025 by Inshaf | 58 Views

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செயல் ஆரம்பம் – உப்பு பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முயற்சிநாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து உப்பை அரசாங்கத்தின் சார்பில் இறக்குமதி செய்யும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தெரிவித்ததாவது, கடந்த வியாழக்கிழமை முதல் இந்திய உப்பு நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், முதல் கட்டமாக 20,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் உப்பினை சந்தையில் விநியோகிப்பதன் மூலம், தற்போதைய உப்பு பற்றாக்குறை நீங்கும் என்றும், அதிகரித்துள்ள விலைகள் குறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, லங்கா உப்பு நிறுவனம் கூடுதலாக 10,000 மெட்ரிக் டன் உப்பை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த உப்புத் தொகுதி மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையும் என அதன் தலைவர் டி.கே. நந்தன திலக தெரிவித்துள்ளார்.