Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது – இலங்கை வரலாற்றில் அதிர்ச்சி

Posted on August 22, 2025 by Admin | 310 Views

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (22.08.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியல் வரலாற்றில், ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதலாவது சம்பவமாகும்